தி.மு.க M.P ராஜேஷ் குமார் முன்னிலையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 20 பேர் தி.மு.க-வில் இணைந்தனர்.

நாமக்கல்லில் ராசிபுரத்தில் கனகபொம்மன்பட்டி ஊரை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சியில் இருந்து கே ஆர் என் ராஜேஷ் குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இராசிபுரம் ஒன்றியம், கனகபொம்மன்பட்டி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பி.முத்துலட்சுமி சிவக்குமார் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 20 பேர் மாற்று கட்சியிலிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என். இராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியானது இராசிபுரம் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான கே பி.ஜெகநாதன் முன்னிலை வகிக்க ஒன்றிய பொருளாளர் ரவி,சிங்களாந்தபுரம் ஊராட்சி திமுக செயலாளர் முருகேசன், பன்னீர்செல்வம், உதயசூரியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story