நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்(NSS) சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்(NSS) சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் (NSS)கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டு நல பணித்திட்ட (NSS) மாணவர்கள் எடப்பாடி அதனை சுற்று வட்டார பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்(NSS) எடப்பாடி நகர மன்ற தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான டி எஸ் எம் .பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில்(NSS) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.  இந்த சிறப்பு முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மாரிமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலாமணி செல்வி, உதவி திட்ட அலுவலர் அறிவழகன், என்சிசி அலுவலர் சுப்பிரமணி, முதுநிலை ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story