புகலூரில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி-ரயில் சேவையில் மாற்றம். PRO .

புகலூரில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி-ரயில் சேவையில் மாற்றம். PRO .
புகலூரில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி-ரயில் சேவையில் மாற்றம். PRO . கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன் 12, 14 & 16, 2025 ஆகிய தேதிகளில் புகளூர் ரயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பணிகள் நடைபெறும் அந்த நாட்களில் சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும், திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் ரயில் எண். 56809 திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில், ஜூன் 12, 14 & 16 ஆகிய நாட்களில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்புக்கு இயக்கப்படாது. இதே போல செங்கோட்டையிலிருந்து காலை 05.10 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், ஜூன் 12, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும். புகளூரில் பணிகள் முடிந்த பிறகு, அந்த நாட்களில் கரூர் ஜங்ஷனில் இருந்து ஈரோடு ஜங்ஷனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இதேபோல திருச்சிரப்பள்ளி ஜங்ஷனில் இருந்து பிற்பகல் 1.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி ஜங்ஷனில் இருந்து பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், ஜூன் 12, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும். புகளூரில் பணிகள் முடிந்ததும், அந்த நாட்களில் கரூர் ஜங்ஷனில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். மேலும், ஈரோடு சந்திப்பிலிருந்து மதியம் 2 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண்.16845 ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், ஜூன் 12, 14 மற்றும் 16, 2025 ஆகிய தேதிகளில் கரூர் சந்திப்பிலிருந்து மதியம் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயங்கும்.
Next Story