புதுக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே tata ace வாகனம் திடீரென வலது புறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து.
புதுக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே tata ace வாகனம் திடீரென வலது புறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் குளித்தலை தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன் வயது 35. இவர் புதன்கிழமை அன்று மதியம் 4 மணியளவில் திருச்சி- கரூர் சாலையில் அவரது டூவீலரில் புதுக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது குளித்தலை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி வயது 35 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கோபிநாத்தை முந்தி சென்று திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் அவரது வாகனத்தை வலதுபுறம் திருப்பியதால் பின்னால் வந்த கோபிநாத் டூவீலர் டாட்டா ஏஸ் வாகனத்தின் பின்னல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த கோபிநாத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கோபிநாத் அளித்த புகாரில் சாலை விதிகளுக்கு புறம்பாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெரியசாமி மீது மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





