மதுரை மாவட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பாக .

மதுரை மாவட்டம்  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பாக   .
சிறப்பு தொழில் கடன் முகாம் 06.09.2024 வரை நடைபெறுகிறது
மதுரை மாவட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பாக சிறப்பு தொழில் கடன் முகாம் 06.09.2024 வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆகரவடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தா (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும். தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. மேலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) கடனுதவிக்கு அப்பாற்ப்பட்டு, தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் தொடர்பான விளக்கங்கள், தொழில் திட்ட ஆலோசகர்கள் (Project Guidance) மற்றும் ESG (சுற்றுப்புற குழல் மேலாண்மை) தொடர்பான சந்தேங்களுக்கான விளக்கங்கள் ஆகியவை பெற உதவுதல் போன்ற தொழில்முறை சிரமங்களை கலைவதற்கும், வருங்கால தொழில் நிலைத்தலுக்கும் உறுதுணையாக உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 06.09.2024 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. (TIIC) -மின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEEDS, UYEGP மற்றும் AABCS (SC/ST) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25%/35% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC), பிளாட் எண்.1A/4A, Dr.அம்பேத்கர் சாலை, மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில், (MADITSSIA), மதுரை 625 020 அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள். 87780-40572 & 0452-2533331 மூலமாக தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.
Next Story