ராசிபுரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் UPS பேட்டரி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அஸ்பாக் மின்சாரம் தாக்கி பலி...

X
Rasipuram King 24x7 |7 Aug 2025 7:36 PM ISTராசிபுரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் UPS பேட்டரி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அஸ்பாக் மின்சாரம் தாக்கி பலி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் சாலையில் அஸ்பாக்(41) என்பவர் UPS பேட்டரி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அஸ்பாக் என்பவர் ராசிபுரம் பாரதி தியேட்டர் எதிரே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பழுதாகிய பேட்டரியை எடுத்துச் சென்றதாகும் தற்போது அதனை பொருத்துவதற்காக சென்று உள்ளார். பணியில் ஈடுபட்டிருந்த அஸ்பாக் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசியதில் அஸ்பாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story
