ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட youtuber திவ்யா உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமீன் மனு விசாரணை தேதி ஒத்திவைப்பு.*

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட youtuber திவ்யா உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமீன் மனு விசாரணை தேதி ஒத்திவைப்பு.*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட youtuber திவ்யா உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமீன் மனு விசாரணை தேதி ஒத்திவைப்பு.*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட youtuber திவ்யா உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமீன் மனு விசாரணை தேதி ஒத்திவைப்பு. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் யூ டியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்திக், ஆனந்த் ஆகிய மூவரின் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்தியதாகவும் அதனை வீடியோ எடுத்ததாகவும் ஜனவரி 29ஆம் தேதி திவ்யா சித்ரா,கார்த்தி, ஆனந்த் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவ் வழக்கின் முதல் குற்றவாளியான திவ்யா இரண்டாம் குற்றவாளியாக கார்த்திக் நான்காம் குற்றவாளியான ஆனந்த் ஆகியோர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். .முன்னதாக வழக்கின் மூன்றாவது குற்றவாளியான சித்ராவுக்கு ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணை பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Next Story