உளுந்தூர்பேட்டையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் ரூ.1 லட்சம்  பறிமுதல்

பைல் படம் 

உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் பறக்கும் படை ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை எலவனாசூர்கோட்டை- திருக்கோவிலூர் சாலையில் புகைப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நெடுமானுாரை சேர்ந்த வீராசாமி, ஆவணங்களின்றிஎடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story