10 கோடி ரூபாய் ஏமாற்றிய பெண் நீதிமன்ற வாசலில் சரமாரி கேள்வி கேட்ட பெண்கள்

ஏல சீட்டு நடத்தி 10 கோடி ரூபாய் ஏமாற்றிய பெண் நீதிமன்றத்திற்கு வந்த பெண்ணை பணம் ஏமாந்தவர்கள் நீதிமன்ற வாசலில் வைத்து எங்கள் பணம் எங்கே? என்று காவல்துறை கண்முன்னே, வழக்கறிஞர்கள் முன்னே கேள்வி? எழுப்பியதால் நீதிமன்ற வாசலில் பரபரப்பு
திருத்தணியில் ஏல சீட்டு நடத்தி 10 கோடி ரூபாய் ஏமாற்றிய பெண் நீதிமன்றத்திற்கு வந்த பெண்ணை பணம் ஏமாந்தவர்கள் நீதிமன்ற வாசலில் வைத்து எங்கள் பணம் எங்கே? என்று காவல்துறை கண்முன்னே, வழக்கறிஞர்கள் முன்னே கேள்வி? எழுப்பியதால் நீதிமன்ற வாசலில் பரபரப்பு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் கம்பர் தெரு பகுதியில் வசித்து வந்தவர் ரேவதி வயது (52) இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார் இதனால் இவரிடம் தனியார் பள்ளி ஆசிரியர்கள், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள், என அனைவரும் இவரிடம் ரூபாய் 5 லட்சம் சீட்டு போட்டு பணம் கட்டியுள்ளனர் கடந்த 2024 ஆம் ஆண்டு இவர் திடீரென்று ஏல சீட்டு நடத்தி வந்தவர் ஏல சீட்டு பணம் போட்டவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார் இதனால் 300 மேற்பட்ட எலச்சிட்டு போட்டவர்கள் பணத்தை ஏமாந்து விட்டோம் 10 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் ஏல சீட்டு நடத்திய ரேவதி அவரது மகன் க்ரிஷ் ஹைதராபாத்தில் வேலை செய்பவரிடம் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார் அவரது மகள் கோகிலா ஆஸ்திரேலியா வெளிநாட்டில் இருக்கிறார் இவரிடமும் சீட்டு பணத்தை கொடுத்து வைத்துள்ளார் நாங்கள் வழக்கு கொடுத்து பல மாதமாகிறது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை 10 கோடி பணம் ஏமாற்றிவிட்டு நீதிமன்றத்திற்கு வந்தவரை நாங்கள் பிடித்துக் கொடுத்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்ற வந்த ஏல சீட்டு நடத்த ஏமாற்றிய ரேவதி பிடித்துக் கொண்டு சீட்டில் ஏமாந்த பெண்கள், ஆண்கள் கேள்வி? எழுப்பியதால் நீதிமன்ற வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது காவல்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்கள் கண்முன்னே ஏல சீட்டில் 10 கோடி ரூபாய் ஏமாந்த நபர்கள் கேள்வி? எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தற்காலிகமாக ஏல சீட்டில் ஏமாற்றிய ரேவதி மருத்துவமனை கொண்டு சென்று ஆட்டோவில் அழைத்துச் சென்று சேர்த்த போலீசார் மருத்துவமனை வளாகத்திலும் சூழ்ந்து கொண்டு பணம் கொடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் இடத்தில் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..‌
Next Story