10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பேரணி சென்ற தனியார் பள்ளி மாணவர்கள்...
நீலகிரி சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு போதையில்லா எதிர்காலத்திற்க்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பேரணி சென்ற தனியார் பள்ளி மாணவர்கள்... நீலகிரி மாவட்டம் உதகையில் கிரசன்ட் பள்ளி சார்பில் சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதையில்லா எதிர்காலத்திற்காக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணி உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தலைக்குந்தா பகுதியில் துவங்கி எச்.பி.எப், பிங்கர் போஸ்ட், ஹில்பங்க், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நிறைவடைந்தது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில் பள்ளியில் பயிலும் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டு அதனை பள்ளி மாணவர்கள் பராமரிக்கப்படுவார்கள் என பள்ளியின் தாளாளர் தெரிவித்தார்.
Next Story




