கோடை விடுமுறையில் குமரிக்கு 10 லட்சம் சுற்றுலாப்பயணிகள் விசிட்

கோடை விடுமுறையில் குமரிக்கு 10 லட்சம் சுற்றுலாப்பயணிகள் விசிட்

கோடை விடுமுறையில் கன்னியாகுமரிக்கு 10 லட்சம் சுற்றுலாப்பயணிகள் விசிட் செய்துள்ளனர். 

கோடை விடுமுறையில் கன்னியாகுமரிக்கு 10 லட்சம் சுற்றுலாப்பயணிகள் விசிட் செய்துள்ளனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். இந்த ஆண்டும் கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமானோர் திரண்டு சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் படகில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த 2½ மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 43 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 300 சுற்றுலா பயணிகளும், கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். கோடை விடுமுறை சீசனின் கடைசி நாள் அன்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

Tags

Next Story