வேலூர் மாவட்டத்தில் சாராயம் விற்ற 10 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் சாராயம் விற்ற 10 பேர் கைது

சாராய ஊறலை அளித்த போலீசார்

வேலூர் மாவட்டம் முழுவதும் மது மற்றும் சாராயம் விற்பனை செய்த 10 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் நடத்திய ரோந்து, வாகன சோதனையில் 700 லிட்டர் சாராய ஊறல், 20 லிட்டர் சாராயம், 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story