10பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

10பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

சிங்கம்புணரியில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திட்ட இயக்குனர் வழங்கினார்.

சிங்கம்புணரி வட்டாரத்தில் வேட்டையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாற்று திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

திட்ட இயக்குனர் முகாமினை பார்வையிட்டு 10 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 2 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நார்காலி, 7 பயனாளிகளுக்கு smart phone,4 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி, மடக்கு சக்கர நார்காலி என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.13,50,000 மதிப்பில் ஆன உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்வில் மாற்று திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்கம்புணரி, s.புதூர், வட்டாச்சியர் சிங்கம்புணரி மற்றும் அணைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் கிடைத்திட பரிந்துரை செய்தனர்.

Tags

Next Story