சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

பத்தாண்டு சிறையும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்பளித்தனர்
பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு தர்மபுரி, டிச.14: பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் மாயகண்ணன் (31), கூலி தொழிலாளி. கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 21ம்,தேதி;இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி முடித்து வீடு திரும்பிய சிறுமியை, வீட்டுக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அங்கிருந்து தப்பிய சிறுமியை பின் தொடர்ந்து சென்று, மாயக்கண்ணன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி சையத்பர்கத்துல்லா மாயக்கண்ணனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story