திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

நீதிமன்றம் 

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஹரிஹந்த் நகரை சேர்ந்தவர் அழகம்மாள்.இவர் 2013 ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட சென்னை சத்யா நகரை சேர்ந்த மணிகண்டன் வீட்டிற்குள் புகுந்து அழகம்மாளை தாக்கி ரூ.400 மற்றும் 3 அலைபேசிகள், வங்கி பாஸ்புக் உட்பட பல்வேறு ஆவணங்களை திருடி சென்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story