திண்டுக்கலில் துாய்மை பணிக்காக 100 பேர் தயார்

திண்டுக்கலில் துாய்மை பணிக்காக  100 பேர் தயார்

தூய்மை பணியாளர்கள்

திண்டுக்கலில் துாய்மை பணிக்காக 100 பேர் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை சுற்றுப்குதி துாய்மை பணிக்காக செல்ல திண்டுக்கல் மாநகராட்சி பணியாளர்கள் 100 தயார் நிலையில் உள்ளனர்.சென்னை சுற்றுப் பகுதிகளில் புயல் காரணமாக இடைவிடாது பெய்த மழையால் எங்கும் தண்ணீர் தேங்கி உள்ளது.

ரோடுகளிலும் மழைநீர் கழிவுநீரோடு கலந்து குளம் போல் தேங்கி உள்ளது. தற்போது மழைநீர் வடிந்து எல்லா பகுதிகளிலும் குப்பை தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. இதன் துாய்மை பணிக்காக திருச்சி,மதுரை மாநகராட்சிகளிலிருந்து பணியாளர்கள் சென்னை சென்றநிலையில், திண்டுக்கல் மாநகராட்சியிலிருந்து சென்னை செல்வதற்காக 100 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Tags

Next Story