விழுப்புரத்தில் சி.எம் பிறந்தநாள் முன்னிட்டு 100 பேர் ரத்ததானம்

விழுப்புரத்தில் சி.எம் பிறந்தநாள் முன்னிட்டு 100 பேர் ரத்ததானம்

 ரத்ததானம்

விழுப்புரத்தில் சி.எம் பிறந்தநாள் முன்னிட்டு எம்.எல். ஏ உள்பட 100 பேர் ரத்ததானம் ரத்ததானம் வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு மாநில மருத்துவர் அணி இணைசெயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முகாமை மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முகாமில் லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் ரத்ததானம் செய்தனர். முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பிரபாகரன், கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் பேரூராட்சி செயலாளர் ஜீவா, அவைத்தலைவர் வக்கீல் கண்ணப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கேசவன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் குப்புசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தவமணி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் செந்தில்குமார், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story