தனியார் பள்ளியில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

மதுராந்தகத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் இயங்கி வரும் விவேகானந்தா வித்யாலயா தனியார் மெட்ரிக் பள்ளியில் +2 வகுப்புக்கான தேர்வுக்கான ரிசல்ட் இன்று வெளிவந்தன இப்பள்ளியில் தேர்வு எழுதிய 183 மாணவ மாணவியர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 22 பேர் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால் பள்ளியில் மாணவ மாணவிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி நூறு சதவீத தேர்ச்சியை சிறப்பாக கொண்டாடினர்.

Tags

Next Story