100 சதவீதம் வெற்றி உறுதியாகிவிட்டது: அமைச்சர் தங்கம்தென்னரசு

100 சதவீதம் வெற்றி உறுதியாகிவிட்டது:  அமைச்சர் தங்கம்தென்னரசு

அமைச்சர் பிரச்சாரம்

100 சதவீதம் வெற்றி உறுதியாகிவிட்டது என சிவகாசியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இண்டியா கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளின் கூட்டம் சிவகாசி காமராஜர் பூங்கா அருகே அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரும்,

பாராளுமன்ற தேர்தல் பொருப்பாளருமான தங்கம்தென்னரசு மற்றும் சிவகாசி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசோகன் தலைமையில் நடைப்பெற்றன. பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்க தாகூர் வெற்றி பெற்றுள்ளார் என்றும்,

இன்னும் கடுமையாக நாம் உழைக்க வேண்டும் என்றார்.பின்னர் மாநகராட்சிக்குட்பட்ட 29,30 ஆகிய வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு சென்று அமைச்சர் தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா ஆகியோர் தலைமையில் மேளம்,தாளம் முழுங்க திமுக அரசியின் சாதனைகளை விளக்கியும், மோடி அரசை அகற்ற கோரியும் நடந்தே சென்று துண்டு நோட்டீசை மக்களிடம் வழங்கி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சி இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story