நமக்கு நாமே திட்டத்தில் வடிகால் - தனியார் நிறுவனம் ரூ.1.04 கோடி நிதி

நமக்கு நாமே திட்டத்தில் வடிகால் - தனியார் நிறுவனம் ரூ.1.04 கோடி நிதி

காசோலை வழங்கிய தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாலர் அப்பேரல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கணக்கம்பாளையம் பிரிவு முதல் கணக்கம்பாளையம் எல்லை வரை 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடிகால் அமைப்பதற்கு ரூ. 2.04 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு டாலர் ஏற்றுமதி நிறுவனத்தின் சார்பில் 50 சதவீத பங்கான ரூ 1.02 கோடி மதிப்பிலான காசோலையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story