ஒரே நாளில் 104 பேர் கைது - அதிரடி காட்டிய போலீஸ்

ஒரே நாளில் 104 பேர் கைது - அதிரடி காட்டிய போலீஸ்

கோப்பு படம்

ஒரே நாளில் கஞ்சா மது விற்பனை தொடர்பாக 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி மன்னார்குடி தாலுகா திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 18 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,200 கிலோ கஞ்சா பறிமுதல். இதனை தொடர்ந்து முத்துப்பேட்டை வலங்கைமான் ஆகிய காவல் நிலையங்களில் தடை செய்யப்பட்ட பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்து அதில் ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 10 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மது விற்பனை தொடர்பாக 70 நபர்கள் கைது செய்து அவர்கள் மீது 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 834 பாட்டில்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம் தொடர்பாக ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டு அதில் இரண்டு வழக்குகள் பதிவு செய்தும் மேலும் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியதாக 88 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story