1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை : ரேஷன் அரிசி கடத்தி விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் புதுக்கோட்டை மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் செம்பட்டி விடுதி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முருகராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டபோது, 21 சாக்கு மூட்டைகளில் ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த முகமது ஹக்கீம் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், கிராமமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வெளி சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
Next Story