தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

அனல் மின் நிலையம் 

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டு 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் ஸ்விட்ச் யார்ட் பகுதி முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதால் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story