ஊத்தங்கரை அருகே 1,052 மது பாட்டில்கள் பறிமுதல்

ஊத்தங்கரை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,052 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் சிங்கார பேட்டையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சிங்காரப்பேட்டை அம்பேத்கார் நகரில் தமிழ்வாணன் என்பவருடைய வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது உரிய அனுமதியின்றி 1052 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1052 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழ்வாணன் வயது 42 அவருடைய தந்தை ரங்கன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலைமறைவான இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தலைமறைவான தமிழ்வாணன் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story