திண்டுக்கல்லில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 105ஆவது நினைவு தினம்

திண்டுக்கல்லில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 105ஆவது நினைவு தினம்

ஜாலியன் வாலாபாக் படுகொலை

திண்டுக்கல் மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 105-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்ச்சிக்கு சிவாஜிமன்ற கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலா் மா.காளிதாஸ் கலந்து கொண்டாா். நிகழ்ச்சியின்போது ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது உயிரிழந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜி மன்றத்தின் நிறுவனா் சு.வைரவேல், நிா்வாகிகள் சுந்தரமகாலிங்கம், அருணகிரி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் செய்தனா்.

Tags

Next Story