108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை அரசே ஏற்றி நடத்த வேண்டும்

X
அரியலூர் ஜூன்.23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட நேரடி கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாக்யராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர். பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கடந்த 2008 முதல் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் பணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது, தொழிலாளர்களின் நலன் கருதி 108 நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், மாவட்டத்தில் டூட்டி ரோஸ்ட் போடப்பட்டு பாரபட்சமாக பணி வழங்கப்பட்டுள்ளது கண்டித்து அனைவருக்கும் முறைப்படி பணி வழங்க வேண்டும், இந்த ஆண்டு ஊதிய உயர்வு 30% வழங்க வேண்டும், எனவும் தீபாவளி ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்க வேண்டும், 108 ஊழியர்களின் போதுமான இருப்பிடம் உடல் உபாதைகளை கழிக்க கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும், பெண் ஊழியர்கள் பாதுகாப்பை கருதியும் வெகு தொலைவில் பெண் ஊழியர்களுக்கு பணி வழங்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story

