தபால் ஓட்டளிக்க அனுமதி வேண்டும்-108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு!

தபால் ஓட்டளிக்க அனுமதி வேண்டும்-108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு!

கோரிக்கை மனு

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
கோவை நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அறிமுக கூட்டம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.தேர்தல் பணிகள் ஆயுத்தமாகி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் 65-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90% பணியாளர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிக்க விடுப்பு எடுத்து சென்றால் பொது மக்களின் அவசர சேவை பாதிப்பு அடையும் என்பதால் விடுப்பு மறுக்கபடுவதாகவும் இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் எனவே தங்களுக்கும் தபால் ஓட்டு வழங்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags

Next Story