108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் ஏப்ரல் 20ம் தேதி பெரம்பலூர் பழைய நகராட்சி திடலில் , சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் முறையான விருப்பக் கடிதம் பெற்றுக்கொண்டும் பணிமூப்பு அடிப்படையிலும் விருப்பப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்,

108 ஆம்புலன்ஸில் அவ்வப்போது நடக்கும் வாகன குறைபாடுகள் மற்றும் தொழிலாளர் தரப்பு பிரச்சினைகள் குறித்தும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கேட்டறிந்து உடனடியாக அதற்கு சுமூக தீர்வு காண வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்,

கூட்டத்தில் நடந்து முடிந்த 108 ஆம்புலன்ஸ் சங்க தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாத நபர்களுக்கு, நினைவு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், மாவட்ட செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் கோபி, மற்றும் தேவபாலன் உள்ளிட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story