சங்கரன்கோவில் தங்க மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை

சங்கரன்கோவில் தங்க மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் தங்க மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது.


சங்கரன்கோவிலில் தங்க மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் தங்கமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 26 ஆம் தேதி பந்தகால் நாட்டுதல் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த பால்குடம் எடுத்தல் முளைப்பாரி தீச்சட்டி சப்பரம் வீதி உலா திருவிழா நடைபெற்றது.

முளைப்பாரி உடன் அம்மன் உருவச்சிலை, வேல், ஆகிய சிலைகளையும் காப்பு கட்டிய பக்தர்கள் சுமந்து ஊர்வலமாக சென்றனர். மேலும் நள்ளிரவு பூக்குழி திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 108 விளக்கு பூஜை நடைபெற்றது பெண்கள் மற்றும் குழந்தைகள் வரிசையாக அமர்ந்து விளக்கேற்றி குங்குமம் கொண்டு போற்றி மந்திரங்கள் படித்து அம்மனை வழிபாடு செய்தனர். திருவிழாவை முன்னிட்டு தங்கமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

Tags

Next Story