ஐயப்பன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

ஐயப்பன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்

நத்தம் அருகே சமுத்திரா பட்டியில் ஐயப்பன் கோயிலில் 108 சங்காபிஷேகம் பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திரா பட்டியில் உள்ள ஐயப்பன் கோயில் 39ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து கும்பங்களுக்கு பூஜையும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் 108 சங்கு அபிஷேகமும் கலச அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் நடந்தது.

Tags

Next Story