தீவனூர் விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

தீவனூர் விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

சுயம்பு பொய்யாமொழி விநாயகர்

திண்டிவனம் அருகே தீவனூர் விநாயகர் கோவிலில் நடந்த சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், யாகசாலை வேள்வியும், தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, அந்த கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சகுந்தாலாம்மாள், பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் அறங்காவலரின் அதிகாரம் பெற்ற முகவர் செய்திருந்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story