ஆட்சீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்.

ஆட்சீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்.
வலம்புரி சங்காபிஷேகம்.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்தியை முன்னிட்டு நடந்த 108 வலம்புரி சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருள்மிகு இளங்கிளியம்மன் உடனுறை ஶ்ரீ ஆட்சிஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தியை முன்னிட்டு ஆட்சிஸ்வரர் ஸ்வாமிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகமும் இளங்கிளியம்மன் மற்றும் உமையாட்சீஸ்வரர் சுவாமிக்கு வாசனை திரவியங்கள் மற்றும் கங்கா தீர்த்தம் கொண்டு மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலசாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story