தி மார்டன் அகாடமி AKIYA - 2024 !

தி மார்டன் அகாடமி பள்ளியில் பத்தாம் ஆண்டு விழா கோலாகல கொண்டாட்டம்!

தி மாடர்ன் அகாடமி பள்ளியின் பத்தாம் ஆண்டு விழாவில் நீயா நானா கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.

தி மாடர்ன் அகடமி AKIYA 2024 நேரலை

நாமக்கல் மாவட்டம், திருச்சி ரோடு N.புதுப்பட்டி அருகே 2006 ஆம் ஆண்டு முதல் தி மாடர்ன் அகாடமி பள்ளி இயங்கி வருகிறது. நாமக்கல் ஸ்ரீனிவாசா கல்வி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியானது குழந்தைகளை மனதாலும் உடலாலும் உறுதியுடன் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தி மார்டன் அகாடமி பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக நீயா நானா கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றி பெரும் பங்களித்தார். மேலும் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரித் தலைவர் PSK.R. பெரியசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் பள்ளியின் தாளாளர் P. குமரேசன், பொருளாளர் P. செல்வராஜ், செயலாளர் K.வேலு, பள்ளியின் முதல்வர் S. அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளியின் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீயா நானா கோபிநாத் பிள்ளைகளிடம் பெற்றோர்களின் பங்கு, கல்வியின் முக்கியத்துவம், கல்வி முறை பற்றியும் உற்சாகமூட்டும் வகையில் சிறப்புரையாற்றினார். பின்னர் பரிசுகள் வழங்கப்பட்டு அனைவரும் எதிர்பார்த்த கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களும், பெற்றோர்களும் , பொதுமக்களும் பெரும் பங்கேற்று மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story