10ம் வகுப்பு பொதுத்தேர்வு : சிறைவாசிகள் 100% தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வு : சிறைவாசிகள் 100% தேர்ச்சி

பைல் படம் 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து சிறைவாசிகளும் தேர்ச்சி அடைந்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மே 10) காலை 9.30 மணியளவில் வெளியானது. இதில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் 14 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 14 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்று அசத்திய சிறைவாசிகளுக்கு சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story