10-ம் வகுப்பு மாணவி மாயம் - பெற்றோர் போலீசில் புகார் !!!

10-ம் வகுப்பு மாணவி மாயம் - பெற்றோர் போலீசில் புகார் !!!
போலீஸ் விசாரணை
கன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு மாணவி மாயமான நிலையில் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வடசேரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.அப்போது அந்த மாணவியும் வாலிபர் ஒருவரும் பேசிக்கொண்டு இந்ததும், மினி பஸ்சில் ஏறி சென்றதும் தெரிய வந்தது. இதனால் அந்த வாலிபர் சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story