11 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி பெரியார்கால்வாய் அருகே ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் உதவி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சரவணன்( 46) என்று தெரிந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சரவணனை கைது செய்தனர்.
Next Story

