11 ஐஸ் பெட்டிகளில் இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

11 ஐஸ் பெட்டிகளில் இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
X
கடல் அட்டை வியாபாரிகள் - பதப்படுத்தும் தொழிலாளர்கள் தப்பி ஓட்டம்
நாகப்பட்டினத்தில் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு இலங்கைக்கு கடத்த இருப்பதாக, நாகை நகர போலீசாருக்கும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் நேற்று தகவல் வந்தது. இதையடுத்து நாகை நகர போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை அருகே சால்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் அங்குள்ள கல்லறைகளில் சோதனை நடத்தினர். போலீசார் வருவதை கண்டவுடன் அங்கு இருந்த கடல் அட்டை வியாபாரிகள், அட்டைகளை பதப்படுத்திய தொழிலாளர்கள் கல்லறையில் இருந்து தப்பி ஓடினர். இதை தொடர்ந்து, கல்லறையின் உள்ளே போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கு கல்லறை காம்பவுண்ட் சுவற்றின் அருகே 11 ஐஸ் பெட்டிகளில் பதப்படுத்தி தார்பாயால் மூடியிருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என தெரியவந்தது. இதை தொடர்ந்து பறிமுதல் செய்த 300 கிலோ கடல் அட்டைகளை, நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், நாகை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story