தர்மபுரியில் ஏடிஎஸ்பி உட்பட 11 காவல் அதிகாரிகள் பணி ஓய்வு

தர்மபுரி மாவட்ட காவல் துறையில் ஒரு ஏடிஎஸ்பி, 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 காவலர்கள் அதிகாரிகள் பணி ஓய்வு.
தர்மபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவன், மற்றும் காவல் ஆய்வாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு முருகேசன், பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை பிரிவு ஜாகிர் உசேன் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் ஆறு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 11 பேர் நேற்று ஓய்வு பெற்றனர். இவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜூஸ் பாதம் தலைமையில் நடைபெற்றது பணி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

Tags

Next Story