குற்றாலத்தில் கெட்டுப்போன 1.1டன் பேரீச்சம்பழம் பறிமுதல்

குற்றாலத்தில் கெட்டுப்போன 1.1டன் பேரீச்சம்பழம் பறிமுதல்
கெட்டுப்போன பேரீச்சம்பழம் பறிமுதல்
குற்றாலம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1100 கிலோ கெட்டுப்போன பேரிச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.  
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கெட்டுப்போன ‘உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் வந்தது. இதையடுத்து, தென்காசி வட்டார உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி நாகசுப்பிரமணியன், குற்றாலம் சந்நிதி பஜாரில் அமைந்துள்ள கடையில் சோதனையிட்டாா். அதில், கெட்டுப்போன 1100கிலோ பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story