1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விற்பனை செய்வதற்காக 1100 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர். கறம்பக்குடி பகுதியில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கறம்பக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜி.அண்ணாமலை என்பவர்வீட்டில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்து ரேசன் அரிசி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அண்ணாமலையை போலீஸார் கைது செய்து, 22 சாக்குகளில் வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story