ஆத்தூரில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி வர்த்தகம்

ஆத்தூரில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி வர்த்தகம்

பருத்தி ஏலம் 

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் ௯ட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், திட்டக்குடி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 604 விவசாயிகள் 4330 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.பல்வேறு பகுதியைச் சேர்ந்த 21 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்திருந்தனர்.இந்நிலையில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.7,269முதல் ரூ.8,129 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.9,789 முதல் 11,1 89 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 4,219முதல் 6,899வரை விற்பனையானது. ஒரு கோடியே 12 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story