118 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

118 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
கீழவெளியூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிய எம்எல்ஏ மாணிக்கம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ வெளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 118 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தோகமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர், பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story