11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வின் ஒரு பகுதியான செய்முறை தேர்வு இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியியல், கணினி அறிவியல், புவியியல், கணக்கு பதிவியலும் தணிக்கையியலும் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 160 செய்முறை தேர்வு மையங்களில் 199 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு செய் முறை தேர்வுகள் தொடங்கின. இதில் 11-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் 10,843 மாணவர்களும், 11,322 மாணவிகளும் என மொத்தம் 22,165 பேர் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதேபோல் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வை 10,559 மாணவர்களும், 11,320 மாண விகளும் என மொத்தம் 21,879 பேர் எழுதினர். இந்த தேர்வு பணியில் முதுகலை, தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் என 500 பேரும் மற்றும் 250 புறத் தேர்வர்களும் ஈடுபடுத்தப்பட்டு தேர்வை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்ட அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை நேரில் கண்காணித்தனர். அப்போது மாணவ- மாணவிகள், செயல்முறை தேர்வுக்கும், கருத்தியல் தேர்வுக்கும் சிறப்பான முறையில் படித்து தேர்ச்சி பெறுமாறு அறிவுரை வழங்கினார். இந்த செய்முறை தேர்வானது வருகிற 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Tags

Next Story