காளியம்மன் கோவிலில் 11 வது ஆண்டு வருஷாபிஷேக விழா

காளியம்மன் கோவிலில் 11 வது ஆண்டு வருஷாபிஷேக விழா

வருசாபிஷேகம்

சிவகிரி காளியம்மன் கோவிலில் 11 வது ஆண்டு வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும் .இந்த கோவிலில் நேற்று 11 வது ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமங்கள், யாகங்கள், அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் தளரான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஏற்பாடுகளை பௌர்ணமி பூஜைவழிபாட்டு குழு நிர்வாகிகள் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story