சிக்கியது 12 அடி நீள மலைப்பாம்பு

சிக்கியது 12 அடி நீள மலைப்பாம்பு
பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு
சுருளக்கோடு அருகே உள்ள செல்லம்திருத்தியில் 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு அருகே உள்ள செல்லம்திருத்தி பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய். இவர் சுருளகோடு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். வீட்டின் பின்பகுதியில் உள்ள ஆட்டு கொட்டகையில் உள்ள ஆடுகள் திடீரென சத்தம் போட்டு உள்ளது. அப்போது கதவை திறந்து பார்த்துள்ளார்.

அங்கே ஆட்டுக் கொட்டகையருகில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. உடனடியாக இரு குறித்து வேளிமலை வனச்சர அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர்கள் அங்கு சென்று பதுங்கி இருந்த மலைப் பாம்பை பிடித்தனர். இது சுமார் 12 அடி நீளம் 30 கிலோ எடை உள்ளதாக இருந்தது. தக்க நேரத்தில் பிடிக்கப்பட்டதால் ஆடுகள் தப்பியது.

Tags

Next Story