நெமிலியில் 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

நெமிலியில் 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்

நெமிலி பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவின்பேரில் பேரூராட்சியில் உள்ள அண்ணா சாலை, அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் துப்புரவு மேற்பார்வையாளர் அசோகன் தலைமையிலான பணியாளர்கள் மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், பேக்கரி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? எனத் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது. அந்தக் கடைகளில் இருந்து 12 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது.

Tags

Next Story