வெண்மணி தியாகிகள் தினத்தில் 12 பேர் சிபிஎம் கட்சியில் இணைவு

வெண்மணி தியாகிகள் தினத்தில் 12 பேர் சிபிஎம் கட்சியில் இணைவு
கொடியேற்று விழா
வெண்மணி தியாகிகள் தினத்தில் 12 பேர் சிபிஎம் கட்சியில் இணைந்தனர் 

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், திருச்சென்னம்பூண்டி புதுப் பாலம் தெருவில், வெண்மணி நினைவு தினத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது. கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். ரமேஷ் கொடியேற்றினார்.

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி தலைமையில், புதிதாக 12 பேர் கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து கட்சி அமைப்பு, செயல் திட்டம் குறித்து பி.கலைச்செல்வி சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகேசன், பாலச்சந்திரன், விதொச ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த தோழர் சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் 45 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story