ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 12 பேரை தெரு நாய் கடித்ததால் பரபரப்பு

ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 12 பேரை தெரு நாய் கடித்ததால் பரபரப்பு
விருதுநகரில் இன்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 12 பேரை தெரு நாய் கடித்ததால் பரபரப்பு
நாய்களை கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தினசரி இருசக்கர வாகனத்தில் செல்வோரையும், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறியவர்களையும் மற்றும் பெரியவர்களையும் தெருநாய்கள் கடித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனையொட்டி இன்று விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யனார் நகர், கலைவாணர் நகர், கலைஞர் , அள்ளித்தெரு, பரங்கி நாதபுரம் தெரு,உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் இன்று ஒரே நாளில் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 மாத குழந்தை, 10 வயது சிறுவன் கோபிகிருஷ்ணன், முகமது அத்தான், இசக்கியம்மாள் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நபர்களை தெரு நாய்கள் கடித்த நிலையில், இன்று ஒரே நாளில் 12க்கும் மேற்பட்ட நபர்களை தெரு நாய் கடித்ததில் இவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பொதுமக்கள் அனைவரும் தெரு நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story