வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை!

கொள்ளை

பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டுப்போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி சங்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (64). விவசாயி. நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு ஜெகநாதன் வயலுக்கு சென்றார். மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டுப்போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். கொள்ளை நடந்த வீட்டை இலுப்பூர் டிஎஸ்பி முத்துராஜா பார்வையிட்டார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story