கம்பெனி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

கம்பெனி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

நகை திருட்டு

சேலத்தில் கம்பெனி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு - போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சேலம் சின்னதிருப்பதி பங்களா நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரவிக்குமார் (வயது 37). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார் . இவரது பெற்றோர் இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 19-ந் தேதி வீட்டைப் பூட்டி விட்டு காசிக்கு சென்றனர். காலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த மணிவண்ணன் பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். இது குறித்து அவர் கணேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கணேசன் பெங்களூருவில் வேலை பார்க்கும் தனது மகன் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உ டனடியாக சேலம் விரைந்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோ உடைத்து அதிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 12 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ரவிக்குமார் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுபாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து, கதவு, பீரோ உள்ளிட்டவைகளில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் மர்மநபர் உருவம் பதிவாகி உள்ளதா ? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story